இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label ராஜா. Show all posts
Showing posts with label ராஜா. Show all posts
Wednesday
கலைஞர் குடும்பத்திற்காக தற்கொலை செய்யும் அடிமைகள்
உலக மகா ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய ராஜாவின் பினாமியும் நண்பனுமான சாதிக் பாட்சா இன்று தற்கொலை செய்து கொண்டது மேலும் பரபரப்பையும் பதட்டத்தையும் உருவாக்கியிருக்கிறது . பல கட்ட விசாரணைகள் நடந்து முடிந்த நிலையில் இந்த ஊழல் கலைஞரின் குடும்பம் தான் சம்மந்த பட்டிருப்பதாக எல்லோருக்கும் தெரிந்து விட்ட நிலையில் சாதிக் பாட்சாவின் தற்கொலை மேலும் பல உண்மைகளை வெளிபடுத்த இருக்கிறது .
இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முக . ஸ்டாலினின் நண்பர் என அறியப்பட்ட ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதும் பிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது . அரசியல் கொலைகளை கேள்வி பட்டிருப்போம் . ஆனால் இந்த மாதிரியான திமுக அரசியல் கொலைகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் .
தேர்தல் நெருங்கி விட்டதால் எதிர்கட்சிகள் இதையே தேர்தல் பிரச்சாரமாக செய்வார்கள் என்பதால் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . மாநில அரசு உத்தரவிடாவிட்டாலும் சிபிஐ விசாரிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை தான் . சாதிக் பாட்சா சிபிஐ விசாரணையின் பிடியில் உள்ளவர் . ஏற்கனவே சிபிஐ சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்திருக்கிறது .
உலகையே வியக்க வைத்த ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்த ராஜாவின் நெருங்கிய நண்பர் தான் சாதிக் பாட்சா . இவர் ராஜா மந்திரி ஆனா பின்னர் கிரீன் கவுஸ் ப்ரோமொடேர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார் . இந்த நிறுவனமே ராஜாவிற்கு உள்ளது என்று தான் செய்திகள் தெருவிக்கின்றன . திகார் ஜெயிலில் இருக்கும் ராஜா யாருக்காக இந்த ஊழலை செய்தார் என்பது சமீபத்தில் சிபிஐ - ஆல் விசாரணை செய்ய பட்ட கலைஞரின் ஒரு மனைவியும் இன்னொரு மனைவியின் மகளுக்கும் தான் வெளிச்சம் .
இன்று காலை டில்லி செல்வதற்கு விமான டிக்கெட் எடுத்து வைத்திருந்ததாகவும் , சாதிக் பாட்ச அப்ரூவர் ஆக முடிவெடுத்த நிலையில் இந்த தற்கொலை நடந்திருப்பது மேலும் பல சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது . ஏற்கனவே ஸ்டாலினின் பினாமியாக கருதப்பட்ட ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார் . அதே போல் கனிமொழிக்காக ஊழல் செய்த ராஜாவின் பினாமியாக கருதப்பட்ட சாதிக்கும் இப்போது தற்கொலை செய்துள்ளார் .
யாரை காப்பாற்ற இந்த தற்கொலைகள் என்பது விசாரணைக்கு பின்னர் தான் தெரிய வரும் . நல்ல வேளை ராஜா ஏற்கனவே ஜெயிலுக்கு போய் விட்டார் அதனால் தப்பித்தார் .......... முட்டாள் தனமாக நம்பியிருக்கும் தொண்டர்களை எப்போது தற்கொலை செய்ய வைப்பார்களோ என்ற அச்சம் தான் இப்போது மிச்சம் .
Monday
யார் ஸ்பெக்ட்ரம் குற்றவாளி ?
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
கருணாநிதி,
திமுக,
ராஜா,
ஸ்பெக்ட்ரம் ஊழல்
எழுதிய நேரம்
Monday, November 15, 2010
ராஜாவா ? மன்மோகன் சிங் ? சோனியா? கருணாநிதி? கனிமொழி? யார் தான் குற்றவாளி . ஒரு குற்றம் நடந்தால் அதில் குற்றவாளி யார் என விசாரித்தால் பலரும் குற்றத்தில் சம்மந்த பட்டிருப்பார்கள் . இன்று இந்தியாவையை அதிர வைத்திருக்கும் ஊழல் தான் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் . ஆசிய கண்டத்திலேயே மிக பெரிய ஊழல் இது தான் என்றும் சொல்லுகிறார்கள் . உலகின் மிக பெரிய மக்களாட்சி நாடு இந்தியாவில் தான் இப்படி நடக்கும் .
இந்தியா இதுவரை பல ஊழல் வாதிகளை கண்டிருக்கிறது . ஆனால் இது மிக பெரிய ஊழல் என்றே கணக்கிட படுகிறது . இப்படி ஒரு ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிந்தவுடனே முதன் முதலில் மாறன சகோதரர்களின் மீடியாக்களில் தான் பிரபலமாக ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்க பட்டது . இது ஒரு பூதாகரமாக அமைந்து விடுமோ என எண்ணிய கலைஞர் மாறன சகோதரர்களிடம் மண்டியிட்டது வேறு . மாறன சகோதரர்களை அமுக்கி விட்டால் பிரச்னை தீர்ந்து விடும் என கணக்கு போட்ட கருணாநிதிக்கு மக்கள் விளிப்புனர்வாலும் மற்ற ஊடகங்களாலும் மத்திய கணக்கு அதிகாரிகள் மூலமாகவும் மீண்டும் பிரச்னை வந்தது . எதிர்கட்சிகள் ராஜாவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் . ராஜா மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தை முடக்கினர் . பின்னர் ஒரு வழியா ராஜா ராஜினமா செய்வதாக அறிவிக்க பட்டது .
ஆனால் உண்மையில் யார் குற்றவாளி? ராஜா மட்டும் தானா? கிடையாது ராஜா பலிக்கு கொடுக்க பட்ட ஆடு மட்டும் தான் . இத்தனை கோடிகளையும் ராஜா சுருட்டியிருப்பார் என நினைத்தால் அது தான் தவறு . இந்திய அரசியல் கேளிகூத்தாட படும் போது இவ்வாறு ஊழல்கள் இருக்க தான் செய்யும் . கூட்டணி ஆட்சியை உண்மையான கூட்டாட்சி என்று ஏமாற்றி கொண்டிருக்கும் அரசியல் வாதிகள் தாங்கள் கையில் அதிகாரம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் . அதற்கு பணம் ஒன்றே போதும் என்ற குறிக்கோள்களில் தான் இந்த கொள்ளையடிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன . ஊழலை தண்டிக்க சரியான சட்டங்கள் இல்லாததால் தான் இந்த நிலை . அப்படி ஒரு சரியான சட்டங்கள் எந்த அரசியல் நிற்பந்தங்களுக்கும் பணியாமல் இருந்திருந்தால் இன்று கருணாநிதியால் முதலமைச்சராக இருந்திருக்க முடியாது .
தமிழகத்திலேயே முதன் முதலாக ஒரு ஊழல் ஆட்சியை கொடுத்தவர் தான் இப்போதைய முதல்வர். அப்போதைய சர்க்காரிய கமிசன் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்ய பட்டுள்ளது என அறிக்கை அளித்தது . அரசியலுக்காக அந்த வழக்குகள் தள்ளுபடி செய்ய பட்டது எல்லாம் முடிந்து போன கதை . அந்த தைரியத்தில் தான் இவர்களால் துணிந்து ஊழல் செய்ய முடிகிறது .
இந்த மிக பெரிய ஊழலில்காங்கிரஸ் கட்சிக்கு பலன் இருந்ததாகவும் சொல்ல படுகிறது . அதனால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆற்று வெள்ளம போல் பணம் இறக்க பட்டது . ஆனால் இதில் மிக பெரிய பலன் அடைந்தது திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும் தான் ஊழலில் கிடைத்த லாப பணத்தை ராஜா ஒருவர் கொண்டு போக முடியாது . ராஜாவுக்கு இந்த ஊழலில் எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதை விட இரண்டு மடங்கு பங்கு கருணாநிதிக்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் இருக்கிறது . கருணாநிதியால் மட்டுமே இத்தனை கோடிக்கு ஊழல் செய்ய சிந்திக்க முடியும் . ராஜா ஒருவரால் இது முடியாது . இந்த ஊழலில் முக்கிய குற்றவாளியாக பார்த்தால் கருணாநிதியும் அவர் குடும்பமும் தான் கடைசியில் பல்கடாக்கப்பட்டார் ராஜா .
சிலருடைய வாதங்கள் இது அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தானே தவிர ராஜா ஊழல் செய்ததாக எங்கேயும் சொல்லவில்லை . அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இத்தனை கோடி ருபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை விட இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது திட்டமிட்டு இழப்பை ஏற்படுத்தியது . திட்டமிட்டு இழப்பை ஏற்படுத்தியதால் ஏற்பட்ட பலன் தான் ஊழல் . இந்த ஊழலில் ராஜாவை மட்டும் பலி ஆடு ஆக்காமல் தீர விசாரித்து ஊழல் செய்து அரசுக்கு இழப்பு எற்படுத்தியவர்களை தண்டிக்க வேண்டும் . இது தான் அனைவருடைய விருப்பம் .
Subscribe to:
Posts (Atom)

