Saturday

தேசிய தலைவரின் படமின்றி அனைத்துலக தொடர்பு இணையதளம்

விடுதலை புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் செல்வா ராஜா பத்ம நாதன் அவர்களால் அனைத்துலக தொடர்புகளுக்கான இணைய தளம் www.ltteir.org திறக்கப்பட்டுள்ளது . விடுதலை புலிகள் ராணுவ ரீதியில் தோற்கடிக்க பட்ட போது ராணுவத்தால் தேசிய தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்று சொன்ன போது முதலில் அதை மறுத்தார் . பின்னர் சில நாட்கள் தாண்டி தலைவர் வீரமரணம் அடைந்து விட்டார் என சொன்னார் . அதோடு விடுதலை புலிகள் ராணுவ ரீதியில் தான் தோற்கடிக்க பட்டனர் அரசியல் ரீதியில் அல்ல என நாடு கடந்த தமிழ் ஈழம் உருவாக்குவோம் என புலம் பெயர் வாழ் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தார் .


ஈழ தமிழர்களில் பெரும்பாலோர் மற்றும் தமிழுணர்வாளர்கள் இப்போதும் தேசிய தலைவர் உயிரோடு இருக்கிறார் என சொல்லுகிறார்கள் . மேலும் ஈழ முரசு செய்தியை படியுங்கள் http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=991&cntnt01origid=52&cntnt01returnid=51மற்றும் ராணுவத்தால் அடையாள படுத்தப்பட்ட உடல் தலைவரின் உடல் அல்ல என்று ஆணித்தரமாக கூறி வரும் வேளையில் . முதலில் பதமனாதனின் அறிக்கையை வெளியிடாத புதினம் வழுதி என்ற கட்டுரையாளர் வழியாக தலைவர் வீரமரணம் அடைந்து விட்டார் என அறிவித்தது . அதில் கட்டுரையாளர் தேசிய தலைவரை பற்றி தவறாகவும் எழுதியிருந்தது குறிப்பிட தக்கது .


தமிழர்கள் இப்போது யார் சொல்வதை நம்புவது என்ற ஒரு குழப்பமான சூழ்நிலையில் தள்ள பட்டுள்ளது . விடுதலை புலிகளின் அதிகார பூர்வமான தமிழ் நெட் இணையதளம் இதுவரை தலைவர் வீர மரணம் அடிந்தார் என தெரிவிக்கவில்லை . இந்நிலையில் தான் இன்று பத்மநாதன் அவர்களால் அனைத்துலக தொடர்பகதிற்கான இணையதளம் திறக்கப்பட்டுள்ளது . அந்த இணைய தளத்தை பார்த்தல் தேசிய தலைவரின் படம் எங்கேயுமே தென்படவில்லை . மாறாக அனைத்துலக தொடர்பாளர் பத்மநாதன் அவர்களின் படம் மட்டுமே காணப்படுகிறது .


தேசிய தலைவர் வீரமரணம் அடைந்திருந்தால் கூட தமிழ் ஈழ விடுதலை புலிகள் அமைப்பை துவக்கியவர் தமிழர்களின் தேசிய தலைவராக திகழ்ந்தவர் இன்றும் திகழ்ந்து கொண்டிருப்பவர் . விடுதலை புலிகளின் தலைவர் என்ற முறையில் அவரின் புகைப்படம் காண படவேண்டும் . பத்மநாதனை அந்த பதவிக்கும் நியமித்தவர் என்றமுறையில் அனைத்துலக தொடர்பகதிற்காக இணையதளத்தில் தேசிய தலைவரின் படம் இல்லாதது தமிழர்களுக்கு ஏமாற்றத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது .

3 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

//ப்த்மநாதனை அந்த பதவிக்கும் நியமித்தவர் என்றமுறையில் அனைத்துலக தொடர்பகதிற்காக இணையதளத்தில் தேசிய தலைவரின் படம் இல்லாதது தமிழர்களுக்கு ஏமாற்றத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது .//

அப்படியா...

Jerry Eshananda said...

வல்வினை தீர்ப்போம்
தமிழரின் தாகம்
தமிழீழம் என்று
சூளுரைப்போம்.

சின்னப்பயல் said...

செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

Post a Comment

Send your Status to your Facebook