Wednesday

கருணாநிதியின் மட்டமான அரசியலுக்கு இன்னும் ஒரு உதாரணம்



தமிழகத்தில் மேல்சபை நாடாளுமன்ற உறுப்பினருக்கான தேர்தல்களம் சூடு பிடித்துள்ளது. 6 பேரை தேர்ந்தெடுக்க வேண்டிய தேர்தலில் 7 பேர் களத்தில் உள்ளனர். 

சட்ட மன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டிய தேர்தல் என்பதால் ஒவ்வெரு கட்சியின் பலத்தை பொறுத்து வேட்பாளர்கள நிறுத்தப் படுவார்கள். தமியால்கத்தில் அதிமுகவின் சட்ட மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை பார்க்கும் போது 4 பேர் வெற்றி பெற்று விடுவார்கள். ஆனால்  அதிமுக 5 வேட்பாளர்களை அறிவித்தது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி. ராஜா அவர்கள் ஆதிமுகவிடம் ஆதரவு கேட்ட பிறகும் 5 வேட்பாளர்களை அறிவித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதே போல் திமுக சார்பில் கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேமுதிகவிலிருந்து வரிசையாக எம் எல் ஏக்கள் அதிமுகவிற்கு விலை போய் கொண்டிருந்த காரணத்தால் தேமுதிக போட்டியிடாது என்று நினைத்த வேலையில் தேமுதிகவும் தன் பங்கிற்கு வேட்பாளரை அறிவித்தது. அதன் பின்னர் டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு என்றும் தான் அறிவித்த ஐந்து வேட்பாளர்களில் ஒருவரை திரும்ப பெறுவதாகவும் ஜெயலலிதா அறிவித்ததை அடுத்து ஆறு இடங்களுக்கான போட்டியில் ஏழு பேர் போட்டியிடுகிறார்கள். 
இப்போதைய நிலவரப்படி அதிமுக சார்புவேட்பாளர்கள் 4 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜாவும் வெற்றி பெறுவது உறுதியாகி விட்ட நிலையில் கனிமொழிக்கும், தேமுதிகவிற்கு போட்டி நிலவுகிறது. இங்கே தான் கருணாநிதியின் மட்டமான அரசியல் நடைபெறுகிறது. ஈழத்தில் தமிழர்கள படுகொலை செய்ய பட்ட போதும் அதை தொடர்ந்து நான்கு ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டி இருந்து பதவி சுகத்தை அனுபவித்து, இன்னும் காங்கிரஸ் கட்சியுடன் இருந்தால் தெருவில் கால் வைக்க முடியாது என்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஈழ நிலைப்பாட்டை குற்றம் சாட்டி திமுக வெளியே வந்தந்து. 

திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதே திமுக இன்று காங்கிரஸ் காலடியில் சரணாகதி அடைந்துள்ளது. கனிமொழியை வெற்றி பெற வைக்க காங்கிரஸ் கட்சியின் வாக்கை கேட்டு திமுக சார்பில் டி.ஆர்.பாலு இன்று சோனியாவை சந்தித்துள்ளார். இதை விட மட்டமான அரசியல் எங்கேனும் உண்டுமா?  ஏற்கனவே கனிமொழி ஊழல் செய்தார் என்று கனிமொழியை திகார் சிறையில் அடைக்க பெரிதும் காரணமாக இருந்தது இதே காங்கிரஸ் கட்சி தான். சுயமரியாதைக்காக காதலை இழந்தேன் என்று சொன்ன கருணாநிதியால் பதவியை இழக்க முடியாமல் சுயமரியாதை சந்தி சிரிக்கிறது. 

அடுத்த காட்சி திருமாவளவனை பக்கத்தில் வைத்து கொண்டு ராமதாசை கடுமையாக தாக்கி விட்ட, பின்னர் தமிழக அரசு ராமதாஸ் மீது நடவடிக்கை எடுத்த பிறகு ராமதாசை கூட்டணியில் சேர்த்து விடலாம் என்று கணக்கு போட்டு மருத்துவமனை வரை சென்று சந்தித்தார் ஸ்டாலின். ஆனால் அப்போதே அன்புமணி திமுகவுடன் நாங்கள் கூட்டணி சேர மாட்டோம் என்று முகத்தில் அடித்தது போல் சொல்லி விட்டார். பதிலுக்கு ஸ்டாலின் நாங்கள் கூட்டணிக்காக எங்கள் கதவுகளை திறந்து வைக்க வில்லை என்று சொல்லி ஒரு மாதத்திற்குள் அதே அன்புமணியின் வாசலில் காத்து நிற்கிறார் ஸ்டாலின்.  

பதவிக்காக  யார் காலிலும் விழும் இவர்களால் எப்படி சுயமரியாதையை காக்க முடியும்? திராவிட இயக்க வழி வந்த திமுக பெரியார், அண்ணா வழி தோன்றலான திமுக இன்று கருணாநிதியின் குடும்பத்தில் சிக்கி சின்னா பின்னமாவதொடு எந்த திராவிட இயக்கத்தால் நாம் எழுந்தொமோ அதனாலேயே தமிழர்கள் தரம் தாழ்த்தப்படும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.

எந்த காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வீழ்த்த வேண்டும் என்று துவங்க பட்ட திமுகஇன்று கருணாநிதி தலைமையில் அதே காங்கிரஸ் கட்சியிடம் காலில் விழுவது வேதனை.

4 கருத்துக்கள்:

தமிழன் said...

கருணாநிதியிடம் எப்போது தான் சுயமரியாதை இருந்தது ?

விமல் ராஜ் said...

பிச்சை எடுப்பது தான் கருணாவின் தாரக மந்திரம்

Martin said...

எனக்கு தெரிந்து காங்கிரஸ் இந்த முறை திமுகவை ஆதரிக்காது என நினைக்கிறேன்...

இதிலும் ஏமாறபோவது திமுக தான்

Anonymous said...

poda loosu. how long are we going to carry this srilankan issue

Post a Comment

Send your Status to your Facebook